Monday, June 7, 2010

வீழ்வது நானாக இருப்பினும்.. வாழ்வது தமிழாக இருக்கட்டும்....

செம்மொழியான தமிழ் மொழியாம்.
இதோ நம் ரஹ்மானின் இசையில் தமிழ் மாநாட்டிற்க்கான தமிழ் வாழ்த்துப் பாடல்.
இரண்டரை மாத உழைப்பு.. எழுபது பாடகர்கள்... என பின்னியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் சுறுசுறுப்பாக இசைத்துக்கொண்டிருந்த ரஹ்மானை கொண்டுவந்து இந்த பாடலுக்கு சுருதி சேர்க்கச் செய்திருக்கிறார்கள்.

"பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்.." என T.M. சௌந்தரராஜன் ஆரம்பிக்க, யுவன், ஸ்ருதிஹாசன், P.சுஷீலா, ஹரிணி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், பென்னி தயல் என நீளுகிறது இந்த இசைஞர் குழுமம்.

கலைஞரின் பாடல் வரிகள், கௌதம் மேனன் இயக்கம், மூன்று வெவ்வேறு தலைமுறை பாடகர்கள் என மெய் சிலிர்க்கவைக்கும் அம்சங்கள் பல..

பாடலுக்கு மேலும் மெருகேற்ற., குமரியில் தொடங்கி, ராமேஸ்வரம் கடற்கரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வேளாங்கண்ணி....மகாபலிபுரம், டைடல் பார்க் என பல 'அட' சொல்ல வைக்கும் கோணங்களில் கேமரா கொண்டு வர்ணம் தீட்டி இருக்கிறார்கள்.

கர்நாடக சங்கீதம் - அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மற்றும் சௌம்யா..
கிராமிய இசை - M.Y.அப்துல் கனி, காஜாமொய்தீன், S.சாபுமொய்தீன்
ராப் - ப்லேஸ்
என இசைக் காவியம் படைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்க்கும் போதும், என் மனதில் பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பு...

இதோ உங்கள் பார்வைக்கு..