Saturday, August 28, 2010

மதராசபட்டினம்

காதல்..காதல்..காதல் இல்லையேல் சாதல்...
நம்ம அழகூர் மதராஸ்..
டைடானிக் பாணி காதல் கதை.
சுதந்திர இந்தியா பிறக்கும் சமயம்..
அங்குலம் அங்குலமாக ரசித்து படமாக்கியிருக்கிறார்கள்.

சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தலாம்.,
அட! சொல்ல வைக்கும் அழகு யார்?
ஏமி ஜாக்சன்-ஆ? இல்லை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த சென்னைப்பட்டினமா ? என்று.

ஏமி ஜாக்சன், அழகில் பேசுகிறார்.. அழகாக பேசுகிறார்...
கண்களில் அழகு.. உதட்டில் அழகு... சிரிப்பில் அழகு... தமிழ் பேசுவதில் அழகு...
அடடா... அழகோ அழகு...
தமிழ் சினிமா உலகில் வெற்றி வலம் வரப்போவது உறுதி.

ஆர்யா, யதார்த்த நடிப்பு. காதல் வயப்படுவதில், வீரம் கொந்தளிப்பதில்.
சபாஷ் சொல்லவைக்கிறார்.

ஹனீபா, நாசர் படத்திற்க்கு பலம் சேர்க்கிறார்கள்.

இப்படியா இருந்தது நம் சென்னை, என காட்சிகளில் வியக்கவைத்திருக்கிறார்கள்.

"பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே...." பாடல், மனதை மயிலிறகால் வருடுகிறது.

பாராட்ட வேண்டிய முயற்சி.