பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்..
பறவைகள் கூச்சலிடும் மரங்கள்..
வெளிர் நீல வானம்...
பச்சை வர்ணம் தெரிய வைக்கும் புல்வெளி...
சோம்பலோடு மரத்தில் இருந்து விழும் பழுத்த இலைகள்..
இவை ஏதும் இல்லாமல் வெண் பனி போர்வை போர்த்தி இருக்கிறது சிகாகோ.
இன்னும் சொல்லப்போனால் உறை பனி காலம் இது..
அக்டோபர் மாதம் வரை பூத்து குலுங்கும் மரங்கள், குளிர் காலம் வருவதறிந்து இலைகளுக்கு விடை தந்துவிட்டு வெறும் கிளைகளோடு மட்டும் வாழும் காலம்.. photosynthesis செய்து உணவு தயார் செய்ய, சூரியன் அடுத்த ஆறு மாதத்துக்கு தலை காட்டாது என்பதால் தான் இந்த ஏற்பாடு... அட! ஆறாம் வகுப்பு பாடம்..!!
இன்னும் நினைவில் இருக்க காரணம்.... உயிரியல் பாடம் மீது எனக்கு இருந்த ஆர்வம் அல்ல... எங்களது உயிரியல் வகுப்பு டீச்சர் மீது...(ஹி.....ஹி.....)
இன்னும் நினைவில் இருக்க காரணம்.... உயிரியல் பாடம் மீது எனக்கு இருந்த ஆர்வம் அல்ல... எங்களது உயிரியல் வகுப்பு டீச்சர் மீது...(ஹி.....ஹி.....)
போட்டிருக்கும் சட்டைக்கு அடியில் எத்தனை ஆடைகள் என்று நிர்ணயம் செய்வது., உங்கள் குளிர் தாங்கும் சக்தியின் அளவுகோல்.
கடுங்குளிர் என்பது, இங்கு வாழும் மக்களுக்கு சர்வ சாதாரணம்.
நான் கூறும் கடுங்குளிர்...... -20'C. ரத்தம் உறைந்து விடும் குளிர் இது.!
நான் இங்கு(Chicago) வந்தது குளிர் காலம் தலை காட்ட ஆரம்பித்த நேரம்.
நான் சினிமாக்களில் மட்டுமே பனி கண்டு வளர்ந்தவன்.
பனி பிரதேசங்களில் புடவை கட்டி ஆடும் நடிகைகளே... வாழ்க!
நான் இங்கு வந்து இரண்டு மாந்தங்கள் கழிந்து தான் பனி கண்டேன் முதன் முதலில்... துயிலெந்து ஜன்னல் கதவை திறந்தது தான் தாமதம்.... "அட கடவுளே !... அதற்குள் இறந்து சொர்கத்துக்கு வந்துவிட்டேனா.... இளமையின் முழுமை கூட இன்னும் முடியவில்லையே எனக்கு..." என்று மனதுக்குள் நொந்து கொண்டிருந்தபோது தான் புரிந்தது நான் சொர்க்கத்தில் இல்லை.. அதே சிகாகோவில்... பனிப்படலத்தை வெறித்துக்கொண்டிருப்பது..
நான் இங்கு வந்து இரண்டு மாந்தங்கள் கழிந்து தான் பனி கண்டேன் முதன் முதலில்... துயிலெந்து ஜன்னல் கதவை திறந்தது தான் தாமதம்.... "அட கடவுளே !... அதற்குள் இறந்து சொர்கத்துக்கு வந்துவிட்டேனா.... இளமையின் முழுமை கூட இன்னும் முடியவில்லையே எனக்கு..." என்று மனதுக்குள் நொந்து கொண்டிருந்தபோது தான் புரிந்தது நான் சொர்க்கத்தில் இல்லை.. அதே சிகாகோவில்... பனிப்படலத்தை வெறித்துக்கொண்டிருப்பது..
இங்கு கூறப்படும் வானிலை அறிக்கை., நம் ஊர் போன்று விரல்(மதன் பாப் - வடிவேல் கூட்டணி) வைத்து கணிப்பது கிடையாது.
டிவி நிறுவங்கள் நேரடியாக செயற்கைகோள் கொண்டு வானிலை நிபுணர்கள்களால் கணிக்கப்படுவது.
இங்கு., மழை வரும் என்று டிவி அறிவிப்பாளினி கூறிவிட்டால்.. குடை எடுத்துச்செல்லவேண்டியது உங்கள் சமத்து. பனி வரும் என்று கூறினால், கடுங்குளிர் தாங்கும் உடைகள் அணிந்து செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு.
வானிலை அறிக்கையை நம்பி தான் அனைத்தும் செயல் படும் நிலை இங்கு.
திரும்பிய பக்கம் எங்கும் வெள்ளை நிறம் தான். வெண் பனி போர்வை போர்த்தி இருக்கும் மரங்கள், செடிகள், தார் சாலைகள், கார்களும் கூட..
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து தார் சாலைகளில் பனி விலக்கிவிட்டு, உப்பு தெளித்து விட்டு செல்லும் லாரிகளை அடிக்கடி இங்கு பார்க்கலாம்.
இந்திய மண்ணில் இருந்து இங்கு வந்து வாழும் மக்கள் கொண்டு இங்கு ஒரு தனி நாடு அமைக்கலாம்... அவ்வளவு பேர்... எல்லாம் மென்பொருள் நிறுவனங்களின் கைங்கர்யம்.
என்னைப்போல் பனி கண்டிராத பலர் இங்கு உண்டு...
.......பனியை ரசித்து, அதில் பொம்மை செய்து மகிழும் கூட்டம் ஒரு பக்கம்...
....."அட கடவுளே...! இப்படி என்னை பனி தேசத்தில் சிக்க வைத்து விட்டாயே" என்று நொந்து கொள்ளும் கூட்டம் ஒரு பக்கம்....
இதில் எந்த ரகம் நீ என்று கேட்கிறீர்களா..!?
அதற்கும் பதில் வைத்திருக்கிறேன்.... -29c குளிர்... நேரம்:நள்ளிரவு 10:45
டிசம்பர் 31,2009..
ரத்தம் உண்மையிலேயே உறைந்து தான் போய்விட்டதோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். மூக்கு உறைய ஆரம்பித்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது.... மூக்கு இருகிறதா என்று தெரிய அடிக்கடி மூக்கை தொட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய கொடுமை...
அந்த குளிரிலும் நடுங்கியவண்ணம், புகைப்படமேடுத்துக்கொண்டிருந்தேன் சிகாகோ-வின் புத்தாண்டு வானவேடிக்கையை.....
உங்கள் பார்வைக்காக எனது புகைப்பட தளதில்.
குளிர் கண்டு அஞ்சவில்லை என்று கூறப்போவதில்லை நான்.. அதை சமாளிக்கும் சக்தி உடம்பிலும் மனதிலும் உள்ளதா என்று மட்டும் தான் யோசிக்க வேண்டிய நிலை..
கடுங்குளிர் என்றாலும்.... அங்கு வந்திருந்த, வெள்ளை தோல் போர்த்திய பெண்கள் பெரும்பாலானோர் தொடை தெரிய உடை அணிந்து.. பூனை நடை நடந்து என்னை வெறுப்பேத்தியது என்னவோ மறுக்க முடியாத உண்மை...
"எப்படி உங்களால் இப்படி உடை அணிய முடிகிறது...?
கொஞ்சமும் குளிர் இல்லையா..??" என்று கேட்க விளைந்து.......'Eve - teasing' சட்டம் இந்த ஊரில் என்னவென்று சரியாக தெரியாததால், தொண்டையோடு நின்று விட்டது அந்த கேள்வி ..!!
இந்த வாரம் இணையத்தில் படித்ததில் பிடித்தது:
நீ கேட்டால்
உளறாமல் சொல்வதற்கு
மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறேன்...
..... என் பெயரை..!
மீண்டும் சந்திக்கிறேன்... வெகு விரைவில்....
அனுபவங்களோடு...!!
வானிலை அறிக்கையை நம்பி தான் அனைத்தும் செயல் படும் நிலை இங்கு.
திரும்பிய பக்கம் எங்கும் வெள்ளை நிறம் தான். வெண் பனி போர்வை போர்த்தி இருக்கும் மரங்கள், செடிகள், தார் சாலைகள், கார்களும் கூட..
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து தார் சாலைகளில் பனி விலக்கிவிட்டு, உப்பு தெளித்து விட்டு செல்லும் லாரிகளை அடிக்கடி இங்கு பார்க்கலாம்.
இந்திய மண்ணில் இருந்து இங்கு வந்து வாழும் மக்கள் கொண்டு இங்கு ஒரு தனி நாடு அமைக்கலாம்... அவ்வளவு பேர்... எல்லாம் மென்பொருள் நிறுவனங்களின் கைங்கர்யம்.
என்னைப்போல் பனி கண்டிராத பலர் இங்கு உண்டு...
.......பனியை ரசித்து, அதில் பொம்மை செய்து மகிழும் கூட்டம் ஒரு பக்கம்...
....."அட கடவுளே...! இப்படி என்னை பனி தேசத்தில் சிக்க வைத்து விட்டாயே" என்று நொந்து கொள்ளும் கூட்டம் ஒரு பக்கம்....
இதில் எந்த ரகம் நீ என்று கேட்கிறீர்களா..!?
அதற்கும் பதில் வைத்திருக்கிறேன்.... -29c குளிர்... நேரம்:நள்ளிரவு 10:45
டிசம்பர் 31,2009..
ரத்தம் உண்மையிலேயே உறைந்து தான் போய்விட்டதோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். மூக்கு உறைய ஆரம்பித்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது.... மூக்கு இருகிறதா என்று தெரிய அடிக்கடி மூக்கை தொட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய கொடுமை...
அந்த குளிரிலும் நடுங்கியவண்ணம், புகைப்படமேடுத்துக்கொண்டிருந்தேன் சிகாகோ-வின் புத்தாண்டு வானவேடிக்கையை.....
உங்கள் பார்வைக்காக எனது புகைப்பட தளதில்.
குளிர் கண்டு அஞ்சவில்லை என்று கூறப்போவதில்லை நான்.. அதை சமாளிக்கும் சக்தி உடம்பிலும் மனதிலும் உள்ளதா என்று மட்டும் தான் யோசிக்க வேண்டிய நிலை..
கடுங்குளிர் என்றாலும்.... அங்கு வந்திருந்த, வெள்ளை தோல் போர்த்திய பெண்கள் பெரும்பாலானோர் தொடை தெரிய உடை அணிந்து.. பூனை நடை நடந்து என்னை வெறுப்பேத்தியது என்னவோ மறுக்க முடியாத உண்மை...
"எப்படி உங்களால் இப்படி உடை அணிய முடிகிறது...?
கொஞ்சமும் குளிர் இல்லையா..??" என்று கேட்க விளைந்து.......'Eve - teasing' சட்டம் இந்த ஊரில் என்னவென்று சரியாக தெரியாததால், தொண்டையோடு நின்று விட்டது அந்த கேள்வி ..!!
இந்த வாரம் இணையத்தில் படித்ததில் பிடித்தது:
நீ கேட்டால்
உளறாமல் சொல்வதற்கு
மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறேன்...
..... என் பெயரை..!
மீண்டும் சந்திக்கிறேன்... வெகு விரைவில்....
அனுபவங்களோடு...!!