Monday, March 8, 2010

நான் கவிஞனும் அல்ல...

நன்றி.. என்று கூறி இந்த வலை பதிவை ஆரம்பிப்பது மிகை ஆகாது என்று கூட சொல்லலாம்..
என் வலை பதிவைகளை படித்துவிட்டு, குறை நிறைகள் மட்டுமல்லாமல்., மேலும் இந்த வலை தளதில் என்ன இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருத்துகள் கூறி வந்த மின்னஞ்சல்களுக்கு சற்று முன் தான் நன்றி விடை கூறி முடிந்தேன்..

அந்த மின்னஞ்சல்களின் மேலோட்டம்,
1. கணிசமான எழுத்துப்பிழைகள்.
2. ஆங்கில சினிமாவை மட்டும் தான் விமர்சிப்பாயா ? தமிழ் சினிமா-விற்கு என்ன குறைச்சல் ?
3. "பயணக்கட்டுரைகள் போல ஏதாவது இடம்பெறச்செய்!"
4. இன்னும் நிறைய கவிதைகள்..
5. இதற்குமுன் இடம்பெற்ற ஆங்கில பதிவுளை தமிழில் மொழிபெயர்..
6. புதிய வலைபதிவுகளை நாங்கள் தெரிந்துகொள்வது எப்படி?
7. அது என்ன tamil16 ? 
இன்னும் ஒரு படி மேலே போய்(உண்மையில் பல படிகள் மேலே போய்)., 
வீரப்பன் இறந்தது.. காவிரி விவகாரம்... நித்தியானந்த சுவாமியின் லீலையை டிவி யில் ஒளிபரப்பியது சரியா இல்லையா? இது பற்றி உன் கருத்து என்ன ?
என்பது வரை.... கருத்துகள்.. எண்ணங்கள்.. வண்ணங்கள்...  என்று என் கண்களை அகல விரியச்செய்து விட்டிருந்தீர்கள்...


இதோ பதில்களுடன், நான்...
நான் எழுதும் இந்த வலைப்பக்கம் GooGle-லின் இலவச வலைதளத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. TRANSLITERATION   எனப்படும் தொழில்நுட்பம் கொண்டு தமிழை   இந்த வலைப்பக்கத்தில் எழுத வழிவகுக்கிறது GOOGLE.
சுருங்கச்சொன்னால்... நான் தமிழில் எழுத விழைவதை., ஆங்கிலத்தில் அதே போல கணினியில் தட்டச்சு செய்ய, GOOGLE-ன் மென்பொருள் நான் கூருவதறிந்து  அதை தமிழில் மொழிபெயர்க்கும்.

உதாரணத்திற்கு.... "நீங்கள் நலமா ?" என்பதை "neengal nalamaa ?" என்று கணனி எழுத்து பலகையின் பொத்தான்களை அழுத்த, மென்பொருள் கொண்டு மொழி பெயர்க்கிறேன்.
எல்லாம் ஆங்கில-தமிழில் SMS அனுப்பி பழக்கப்பட்ட விரல்கள் தானே.(!)

இப்படி ஆங்கிலத்தில் இருந்து உருமாறும் தமிழ், ஒரு சில இடங்களில் தடுமாறி... தடம் மாறி... எழுத்து பிழைகளில் முடிந்துவிடுகிறது. என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் கண்டிப்பாக செய்கிறேன்... எழுத்துப்பிழைகளை தவிர்க்க.. 

தமிழ் பட விமர்சனங்கள் பற்றி ----  "நான் நிறைய தமிழ் படம் பார்ப்பேன்" என்று நான் சொன்னால் "போதும் பொய் சொன்னது" என்று என்னை நன்கு தெரிந்தவர்கள் சட்டென்று கூறிவிடுவார்கள். நான் தமிழ் படம் நிறைய பார்க்காததர்க்கான காரணத்தை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.. சரி.... இன்றிலிருந்து நான் பார்க்கும் புதிய தமிழ் படங்களின் விமர்சனங்கள் கண்டிப்பாக இங்கு இடம்பெறும்.

எப்போதும் போல்., என் அனுபவ நிகழ்வுகள், பயணக்கட்டுரைகளாக இந்த தளத்தை கண்டிப்பாக அலங்கரிக்கும்.

கவிதைகள் பற்றிய உங்கள் எண்ணங்களை comments  பகுதியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவியுங்கள்..

என் முந்தய ஆங்கில பதிவுகளை மொழி பெயர்ப்பது., நான் கூற வந்த அர்த்தத்தை மாற்றிவிடும். ஆதலால் அந்த ஆங்கில பதிவுகளை, இந்த தளதில் இனிவரும் பதிவுகளின் ஊடே உங்களின் பார்வைக்கு கண்டிப்பாக இடம் பெறச்செய்கிறேன்..

என்னுடைய புதிய வலைபதிவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ள., இந்த தளத்தில் இருக்கும் "Follow" வலைப்பொத்தான் உங்களுக்கு ஆவண செய்யும்..

tamil16 என்பதற்கு வேறு என்ன விளக்கம் இருக்க முடியும். என்னைப்போலவே(எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!)  தமிழும் என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.

நீ வேலை செய்வது IT  நிறுவனத்தில்., உனக்கு ஏது தமிழில் எழுதும் அளவுக்கு நேரம்.. என்பது பெருவாரியானோர் கேள்வி..
"தான் செய்ய நினைத்த வேலையை, நேரமில்லாததால் செய்யமுடிவில்லை... என்று சொல்பவன் முட்டாள்". இது சாக்ரடீஸ் சொல்லோ, 'தினத்தந்தி சாணக்கியன்' சொல்லோ கிடையாது.. இது வரை எனக்கு வாழ்க்கை உணர்த்திய பாடம்...


குறைகளை என்னிடமும்.. நிறைகளை மற்றவர்களிடமும் கூறுங்கள்... அதுவே எனக்கு ஆஸ்கார் மகிழ்ச்சி..


இத்தோடு முடித்துக்கொள்கிறேன் இந்த பதிவை... மீண்டும் சந்திக்கிறேன்... புதிய அனுபவங்களுடன்....